Published : 04 Oct 2016 08:29 AM
Last Updated : 04 Oct 2016 08:29 AM

பாஜக பிரமுகர் தீக்குளிப்பு: உடலில் எரியும் தீயுடன் சாலையில் ஓடினார்

திருவொற்றியூரில் பாஜக பிரமுகர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டை சுதந்திரபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). அட்டைப் பெட்டிகளை வீட்டி லேயே தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். பாரதிய ஜனதா கட்சியின் ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் துணைத் தலைவரான இவர் நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடைக்கு வந்தார்.

ஏற்கெனவே ராஜேந்திரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி இருந்தார். கடையில் இருந்த வர்களிடம் தான் தீக்குளிக்கப் போவதாக கூறிய அவர் வாயில் சிகரெட்டை பற்ற வைத்து, அதே தீக்குச்சியை உடலில் போட்டார். பின்னர் உடலில் பற்றி எரியும் தீயுடன் ராஜேந்திரன் நடுரோட்டில் ஓடினார். இதனால் அந்த இடமே பரபரப்பானது. அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். கடந்த சில நாட்களாக ராஜேந்திரன் அதிகமான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x