Published : 27 Oct 2016 08:54 AM
Last Updated : 27 Oct 2016 08:54 AM

பெண் வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல்: சசிகலா புஷ்பாவை நவ. 2 வரை கைது செய்ய தடை

பெண் வழக்கறிஞர் வீடு தாக் கப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், அவர்களின் மகன் ஆகியோரை நவ. 2 வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப் பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நெல்லை மாவட்டம் திசை யன்விளை அருகே உள்ள ஆனைக்குடியைச் சேர்ந்த பணிப் பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் பணிப் பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளை பெண் வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் சுகந்தி ஜெய்சன் வீட்டின் மீது செப். 11-ம் தேதி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக திசையன்விளை போலீஸார் வழக்கு பதிந்து, சசிகலா புஷ்பா வின் ஆதரவாளர்கள் நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகி யோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் எல்.பிரதீப்ராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற கிளையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப் பட்டது. இதையடுத்து விசார ணையை நவ. 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேரை கைது செய்யக்கூடாது என போலீ ஸாருக்கு உத்தரவிட்டார்.

இதே வழக்கில் கைது செய் யப்பட்ட ஹரி, ராமலிங்கம் உள் ளிட்ட 3 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை நவ. 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x