Published : 11 Aug 2022 06:42 AM
Last Updated : 11 Aug 2022 06:42 AM

சென்னை | இபிஎஃப்ஓ குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், வரும் 17-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இணையவழி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பிஎஃப் கணக்கு எண், யுஏஎண், பிபிஓ எண் மற்றும் தங்களது குறைகள் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணையதள லிங்க், ஓய்வூதியதாரர்களின் மொபைல் எண் அல்லது இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இத்தகவல் சென்னை வடக்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x