Published : 15 May 2016 10:55 AM
Last Updated : 15 May 2016 10:55 AM
2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் பதவியில் இருந்து விலகுவேன் என்று கூறி பாமக முதல்வர் வேட்பா ளர் அன்புமணி ராமதாஸ் நேற்று தருமபுரியில் உறுதிமொழி எடுத் தார்.
தருமபுரி மாவட்டம் பென்னா கரம் தொகுதியில் போட்டியிடும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி நேற்று பாப்பாரப்பட்டி மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் காந்தி சிலை மற்றும் படத்தின் முன்பாக நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அன்புமணி உறுதிமொழி எடுக்கும்போது, ‘ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் பாமக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் பணி செய்வேன். அதுபோன்று செய்து முடிக்கவில்லை எனில் பதவியில் இருந்து விலகுவேன்’ என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT