Published : 25 Mar 2022 07:49 AM
Last Updated : 25 Mar 2022 07:49 AM

வடகிழக்குப் பருவமழை நிவாரணமாக மத்திய அரசு ரூ.352 கோடி விடுவிப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று கூறியதாவது: பேரிடர் நிவாரணமாக எவ்வளவு வந்துள்ளது என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, தற்காலிக நிவாரணமாக ரூ.1,510 கோடி, நிரந்தர சீரமைப்புக்காக ரூ.4,720 கோடி உட்பட மொத்தம் ரூ.6,230.45 கோடி கேட்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை ரூ.352.35 கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பதில் உரையின்போது, பாஜக உறுப்பினர்களைப் பார்த்து, ‘‘இந்த நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x