Published : 15 Feb 2022 08:05 AM
Last Updated : 15 Feb 2022 08:05 AM

பெண்களுக்கு ரூ.1000 - முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி

சென்னை: சென்னை திரு.வி.க.நகர் பகுதி 73 மற்றும் 74-வது வார்டு வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தேர்தல் பிரச்சாரம் பிரச்சாரம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவுக்கு ஆதரவான மக்களின் எழுச்சியை காண முடிகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அலைதான் தமிழகத்தில் வீசுகிறது. திமுக தோல்வியை தழுவும் எனும் காவல்துறை அறிக்கை சென்றுள்ளது. அதை மறைக்கவே நாடகமாடி வருகிறார்கள்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 2 லட்சம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என கூறலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின் 2 கோடி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் கூறத் தயாரா. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x