Published : 26 Apr 2016 01:51 PM
Last Updated : 26 Apr 2016 01:51 PM
தமிழகத்தில் 18 அதிகாரிகளை இடமாற்றம் செய்ததற்குப் பதிலாக பணி நீக்கம் செய்திருக்க வேண்டும் என விஜயகாந்த் பேசினார்.
தேனி மாவட்டம் போடி, ஆண்டிபட்டி தொகுதி தேமுதிக வேட்பாளர்கள் வீரபத்திரன், கிருஷ்ணமூர்த்தி, பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் லாசர், கம்பம் தொகுதி த.மா.கா. வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து விஜயகாந்த் ஆண்டிபட்டியில் நேற்று இரவு பேசியதாவது: தமிழகத்தில் நேற்றுமுன்தினம் 18 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை பணி நீக்கியிருக்க வேண்டும். பெரியாறு அணை போராட்டத்தில் நானும் தேனி மாவட்டத்துக்கு வந்து கலந்து கொண்டேன். உண்ணாவிரதம் இருந்துள்ளேன். ஆனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த திமுகவும், அதிமுகவும் பாடுபட்டதாக அவர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT