Published : 12 Mar 2016 09:20 AM
Last Updated : 12 Mar 2016 09:20 AM
கடையநல்லூரில் காணாமல் போன ஆசிரியையும், பள்ளி மாணவரும் திருப்பூரில் பதுங்கி யிருந்தனர். அவர்களை போலீ ஸார் நேற்று கண்டுபிடித்து அழைத்துச் சென்ற னர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்துக்கொண் டிருந்த மாணவரும், அதே பள்ளி யில் பணிபுரியும் ஆசிரியையும் கடந்த ஆண்டு மாயமாகினர்.
இந்நிலையில், தனது மகனை கண்டுபிடிக்கக்கோரி மாணவரின் தாயார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய் தார்.
மாணவரை 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீ ஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால், இந்த வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றக்கோரி, மாணவ ரின் தாயார் மற்றொரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் காணாமல் போன இருவரும் திருப்பூரில் தங்கியிருந்து, பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருவ தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப் பூருக்கு நேற்று வந்த கடைய நல்லூர் தனிப்படை போலீஸார், அதிகாலையில் அவர்கள் இரு வரையும் கைது செய்து அழைத் துச் சென்றனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT