Published : 25 Mar 2016 08:55 AM
Last Updated : 25 Mar 2016 08:55 AM

திமுகவுடன் பேச எஸ்டிபிஐ குழு அமைப்பு

திமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக எஸ்டிபிஐ கட்சி தரப்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை வகிப்பார். மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், எஸ்.எம்.ரஃபீக் அகமது, பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர் அமீட் ஹம்சா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x