Published : 20 Nov 2021 04:06 PM
Last Updated : 20 Nov 2021 04:06 PM

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர், சேலம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யும்.

தென் தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் கரைக்காலில் மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்யும்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x