Published : 22 Dec 2015 12:13 PM
Last Updated : 22 Dec 2015 12:13 PM
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 47 பேரையும் விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 57 படகுகளையும் விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அக்கடிதத்தில், "கடந்த 17, 19 தேதிகளில் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்ததோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அவ்வாறாக பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் படகுகள் பழுதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தங்கள் தொழில் முடங்கியதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் படகுகள் சேதமடைந்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகும்.
எனவே, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 47 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 57 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க வெளியுறவு அமைச்சகம் வாயிலாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என முதலவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT