Published : 15 Dec 2015 08:18 AM
Last Updated : 15 Dec 2015 08:18 AM

சென்னையில் 262 பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு 23 ஆயிரம் புத்தகங்கள், 15 ஆயிரம் சீருடைகள் விநியோகம்

சென்னையில் மழைக்கால விடு முறை முடிந்து நேற்று மொத்தம் உள்ள 262 மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 23 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் 15 ஆயிரம் சீருடைகள் வழங்கப்பட்டன.

சென்னையில் பெய்த கன மழையால் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்த பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப் பட்டன. பள்ளிகளின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த கடந்த 2 நாட்களாக அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஏற்கெனவே நிவாரண முகாம் களில் தங்கியிருந்த மாணவர்க ளுக்கு, அவர்கள் இழந்த பாடப் புத்தகங்கள், சீருடைகள் அங்கேயே வழங்கப்பட்டன. முகாமில் தங்காத மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டதும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

நேற்று 262 மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முகாம்களில் தங்காத மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, பட்டேல் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அப்போது நிவாரண முகாம்களில் தங்காத மாணவர்களுக்கு புத்த கங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. பின்னர் அப்பள்ளியில் மாணவர்களுக் கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

நேற்று 262 மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முகாம்களில் தங்காத மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, பட்டேல் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அப்போது நிவாரண முகாம்களில் தங்காத மாணவர்களுக்கு புத்த கங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. பின்னர் அப்பள்ளியில் மாணவர்களுக் கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

வராத மாணவர்கள்

பின்னர் மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர ரத்னூ கூறும்போது, “இப்பள்ளி யில் முதல்நாளில் வகுப்புக்கு வராத மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளி சார்பில் அமைக்கப் பட்டுள்ள ஆசிரியர்களைக் கொண்ட சிறப்புக் குழுவினர் சென்று மாணவர்களின் நிலையை ஆய்வு செய்ய உள்ளனர். ஏதேனும் நோய் கண்டிருந்தால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x