Published : 14 Dec 2015 09:22 PM
Last Updated : 14 Dec 2015 09:22 PM
கன்னியாகுமரி மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்பாது தென்தமிழக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைமற்றும் கேரள எல்லை பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இன்று (திங்கள்கிழமை) காலை நிலவரப்படி, வால்பாறையில் 3, தாளவாடி, தேவாலா, சின்னக்கல்லாறில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT