Published : 30 Oct 2015 08:26 AM
Last Updated : 30 Oct 2015 08:26 AM

ஆயுதபூஜை சிறப்பு பேருந்துகளால் அரசுக்கு ரூ.14.38 கோடி வருவாய்

ஆயுதபூஜை காலத்தில் இயக்கப் பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் முன்பதிவு மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.14.38 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆயுதபூஜையை முன்னிட்டு இந்த ஆண்டும் அரசு போக்கு வரத்துக் கழகத்தால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து கடந்த 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கூடுதலாக 6,558 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இது கடந்த ஆண்டைவிட 3,266 அதிகமாகும்.

ரூ.9.69 கோடி

சிறப்புப் பேருந்துகள் மூலம் போக்கு வரத்துக் கழகங்களுக்கு ரூ.9.69 கோடி வருவாய் கிடைத்துள் ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.4.89 கோடி அதிகமாகும்.

மேலும், ஆயுதபூஜை காலத் தில் அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் மற்றும் இதர தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 678 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.4.69 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1.09 கோடி அதிகமாகும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x