Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது போயஸ் தோட்ட இல்லம் முன்பு ரசிகர்கள் முழக்கமிட்டனர்.
‘தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை’ என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு நேற்று ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி மக்கள் மன்றக் கொடி மற்றும் பேனர்களுடன் வந்த அவர்கள், ‘தலைவா அரசியலுக்கு வா’என்று முழக்கமிட்டனர். ‘கொடுத்தவாக்கைக் காப்பாற்றும் ரஜினி, திடீரென பின்வாங்கியது ஏன்? என்று தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’என்றும் கோரினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்கள் சிலர் கூறும்போது, ‘‘அரசியலில் இப்போ மாற்றம் இல்லைன்னா எப்போதும் இல்லை’, ‘மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்’, ‘உயிரே போனாலும் கட்சி தொடங்குவது உறுதி’ என்று உறுதியாக இருந்தரஜினிகாந்த், திடீரென அந்த முடிவில் இருந்து ஏன் பின்வாங்கினார் என்று தெரியவில்லை. அவரதுட்விட்டர் பதிவும், வெளியிடப்பட்ட அறிக்கையும் அவர் வெளியிட்டதுதானா என்று சந்தேகம் உள்ளது. அதனால் அவரது முடிவு பற்றி எங்களுக்கு நேரில் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT