Published : 30 Oct 2015 08:29 AM
Last Updated : 30 Oct 2015 08:29 AM
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் பெறப்பட்ட சுமார் 1 கோடி கையெழுத்துகளை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆளுநர் கே.ரோசய்யாவிடம் நேற்று நேரில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுவிலக்கு கோரி சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமாகா நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். மொத்தம் பெறப்பட்ட 1 கோடியே 1 லட்சத்து 9 ஆயிரம் கையெழுத்துகளையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம்.
மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தமாகா-வின் கொள்கை. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். முதல் கட்டமாக ரயில், பஸ் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் உள்ள மது அருந்தும் கூடங்களை உடனடியாக மூட வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT