Published : 04 Oct 2015 11:46 AM
Last Updated : 04 Oct 2015 11:46 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்: 8,500 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு கடிதம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 8,500 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ் இடங்கள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 10 பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 75 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 167 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற் கான 4-ம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்றும், நாளையும் நடக்கவுள் ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்குமாறு மொத்தம் 8,500 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட் டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x