Last Updated : 22 May, 2020 04:17 PM

 

Published : 22 May 2020 04:17 PM
Last Updated : 22 May 2020 04:17 PM

நெல்லை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஏராளமானோர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பிவரும் நிலையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்று வரையில் 253 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மானூரில் 7, நாங்குநேரியில் 4, களக்காட்டில் 3, ராதாபுரத்தில் 2, பாளையங்கோட்டையில் 1, திருநெல்வேலியில் 1 என்று மொத்தம் 18 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.

திருநெல்வேலியில் சிந்துபூந்துறை சாலை தெரு பகுதியில் டிவி மெக்கானிக் ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அந்த நபர் சென்றுவந்த பகுதிகள் குறித்து சுகாதாரத்துறையினர் கேட்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x