Published : 11 Jul 2019 08:00 AM
Last Updated : 11 Jul 2019 08:00 AM
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது கேரளா, கடலோர மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரம் வழி யாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இவை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஒருசில இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் மாத்தூர், புதுக் கோட்டை மாவட்டம் குடுமியான் மலை ஆகிய இடங்களில் 7 செமீ, கடலூர் மாவட்டம் வேப்பூரில் 6 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் வல் லத்தில் 5 செமீ, புதுக்கோட்டை, கீரனூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, காஞ்சிபுரம் மாவட் டம் செங்கல்பட்டு, அரியலூர் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT