Published : 20 Jan 2016 08:39 PM
Last Updated : 20 Jan 2016 08:39 PM

ஜன.24 முதல் தேர்தல் விருப்ப மனுக்களை பெறுகிறது திமுக

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பிப்ரவரி 10-ம் தேதி புதன்கிழமை வரை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ரூ. 1,000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்'' என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x