Published : 06 Nov 2013 08:40 AM
Last Updated : 06 Nov 2013 08:40 AM

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு: விசாரணை டிசம்பர் 18-க்கு ஒத்திவைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அரசு சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு சார்பில் வழக்குரைஞர் ஏ. ஞானசேகர் ஆஜரானார். விஜயகாந்த் சார்பில் வழக்குரைஞர் பொன். செல்வராஜன், தினேஷ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஒட்டி தேமுதிக மாவட்டச் செயலர் ஜெகநாதன், அவைத் தலைவர் ஜெயபிரபாகர் உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x