Published : 11 Apr 2017 08:08 AM
Last Updated : 11 Apr 2017 08:08 AM
அரியலூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த டாஸ்மாக் பார் கட்டிடத்தை நள்ளிரவில் சிலர் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை யடுத்து, அரியலூரில் இயங்கி வந்த 3 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதற்கு மாற்று இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், அரியலூரில் ஜெயங்கொண்டம் சாலையில் இயங்கிவந்த டாஸ்மாக் கடையை, அம்மாகுளம் சாலையில் உள்ள அய்யப்பன் ஏரி அருகே மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு, தற்போது பார் (மது அருந்தும் இடம்) அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த பார் கட்டிடத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இதுகுறித்து, அரியலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த 14 பேர் மீது அரியலூர் காவல் நிலையத்தில் பார் உரிமை யாளர்கள் நேற்று புகார் அளித் தனர்.
மேலும், இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அம்மாக்குளம் பிரிவு சாலை அருகில் அப்பகுதி மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT