Published : 03 Apr 2017 09:10 AM
Last Updated : 03 Apr 2017 09:10 AM

கோடை மழையால் முதுமலைக்கு திரும்பும் வன விலங்குகள்

கோடை மழை பெய்து வறட்சியில் இருந்து மீள்வதால், முதுமலைக்கு வன விலங்குகள் மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் வனங்களில் பசுமை திரும்புவதுடன், நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்மூலமாக வனங்களில் குட்டை, குளங்கள் நிரம்பி வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி வருகிறது.

இதையடுத்து, இடம்பெயர்ந்த வன விலங்குகள் மீண்டும் தமிழக வனப்பகுதிகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்தில் பெய்த மழையால் வறட்சி நீங்கி, புல் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால், முதுமலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை புலிகள் காப்பகத்துக்குள் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x