Published : 14 Aug 2016 11:01 AM
Last Updated : 14 Aug 2016 11:01 AM
மதுரை மாநகர் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி பேசியதாவது:
கட்சித் தொண்டர்கள், நிர்வாகி களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் கண் டிப்பாகச் செல்ல வேண்டும். மாவட்டச் செயலாளர், கட்சி வேலைகளுக்கு பகுதி செயலா ளர்கள் மூலமே, வார்டு செயலாளரை அணுக வேண் டும். நேரடியாக தொடர்பு வைத் துக்கொண்டு கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கக் கூடாது. மகளிர் அணியில் பெண்களை அதிக அளவில் சேர்த்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டால், விஜயகாந்தையே திமுக வில் சேர்ப்போம் என்கிறார்கள். தேமுதிகவில் சேர மு.க.அழ கிரியே தயாராக இருக்கிறார். அழைத்தால் நாளைக்கே கோயம் பேடு கட்சி அலுவலகத்துக்கு வந்துவிடுவார். ஆனால், அவர் வருவதை விஜயகாந்த் விரும்ப வில்லை.
உள்ளாட்சித் தேர்தல் வருவ தால் கவுன்சிலர் வாய்ப்பு தருவ தாகக் கூறி தேமுதிகவினரை அழைக்கலாம். உங்களை ஆளாக்கிவிட்ட தேமுதிகவுக்கு துரோகம் செய்யாதீர்கள். திமுக வுக்கு சென்ற தேமுதிகவினர் முகவரியை தொலைத்துவிட்டு அவமானப்படுகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT