Published : 02 Feb 2014 01:41 PM
Last Updated : 02 Feb 2014 01:41 PM
பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வரும் பிப்ரவரி 9-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தங்கக்கவசம் அணிவிக்கவுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2010-ம் ஆண்டு நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற போது, பசும்பொன் கிராம மக்களும், கோவை காமாட்சிபுரி ஆதினமும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச்சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அப்போது அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதன் அடிப்படையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி பசும்பொன் செல்லும் முதல்வர் ஜெயலலிதா, அங்குள்ள முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலைக்கு மதியம் 1.30 மணியளவில் தங்கக்கவசம் அணிவிக்கிறார். இந்நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கேற்க வேண்டி பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT