Published : 05 Sep 2016 11:21 AM
Last Updated : 05 Sep 2016 11:21 AM
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த மே 23-ம் தேதி 6-வது முறை முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஜூன் 16-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை, ஜூலை 21-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என 36 நாட்கள் பேரவை கூட்டத் தொடர் நடந்தது. கடந்த 2-ம் தேதியுடன் பேரவை நிகழ்ச்சிகள் முடிந்தன. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அங்கு சில வாரங்கள் தங்கியிருந்து அரசு அலுவல்களை கவனிப்பார் எனவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT