Published : 05 Jul 2016 08:10 AM
Last Updated : 05 Jul 2016 08:10 AM

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் மனைவி காலமானார்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவின் மனைவி எஸ்.நவமணி அம்மாள் (92) சென்னையில் நேற்று காலமானார்.

விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரு மான என்.சங்கரய்யாவின் மனைவி எஸ்.நவமணி அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு சந்திர சேகர், நரசிம்மன் என்ற 2 மகன் களும், சித்ரா என்ற மகளும் உள் ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் நகரச் செய லாளராக நரசிம்மன் செயல்பட்டு வருகிறார்.

தனது அண்ணன் மூலம் கம் யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்த நவமணிக்கு சங்கரய்யாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. விடுதலைப் போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் விடுதலை உணர்வை தூண்டும் பாடல்களை நவமணி அம்மாள் பாடி வந்தார். 1947-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சங்கரய்யா - நவமணி அம்மாள் திருமணம் மதுரையில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இது ஒரு ஜாதி, மத மறுப்பு திருமணமாகும்.

மறைந்த நவமணி அம் மாளின் உடல், பல்லாவரம் நகராட்சி அலுவலகம் பின் புறம் குரோம்பேட்டை நியூ காலனி இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x