Published : 07 Jul 2016 11:08 AM
Last Updated : 07 Jul 2016 11:08 AM
நான் தற்போது மவுன விரதத்தில் இருக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
கட்சிப் பிரமுகர் இல்ல திருமணத்தில் பங்கேற்க, கரூருக்கு நேற்று வந்த அவரை செய்தியாளர்கள் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தனர்.
அப்போது அவர், “தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் யார் என்று கட்சித் தலைமை அறிவிக்காதவரை நான் எதுவும் பேச மாட்டேன். நான் தற்போது மவுன விரதத்தில் இருக்கிறேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT