Published : 18 Mar 2017 08:02 PM
Last Updated : 18 Mar 2017 08:02 PM
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று கொருக்குப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. பாஜக சார்பில் மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்ட பலம்பொருந்திய தமிழகம் அறிந்த கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
இதுவரை எத்தனையோ கட்சிகளுக்கு வாய்ப்பளித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் இந்த முறை பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பாஜக வென்றால் ஆர்.கே.நகர் தொகுதியை தத்தெடுத்து முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்'' என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT