Published : 07 Jul 2016 12:21 PM
Last Updated : 07 Jul 2016 12:21 PM
அம்பாசமுத்திரத்தில் மனைவி, குழந்தைகள், மாமியார், மாமனார் என, 5 பேரை வெட்டிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமுகுட்டி(33). இவரது மனைவி ராஜம்(25). இவர்களுக்கு இஷ்யா(5), நாகேஸ்வரி(2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராஜம் குழந்தை களுடன் அம்பாசமுத்திரம் மேலப் பாளையம் தெருவில் உள்ள பெற் றோர் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை மாமனார் வீட்டுக்கு வந்த பிரமுகுட்டி, அரி வாளால் ராஜம், மாமியார் முத்து லெட்சுமி, மாமனார் சுந்தரசேகர் மற்றும் குழந்தைகளை வெட்டியுள் ளார். 5 பேரும் பாளையங் கோட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாசமுத் திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT