Published : 24 Jun 2016 08:09 AM
Last Updated : 24 Jun 2016 08:09 AM
வழக்கறிஞர்களின் கோரிக்கை களை வலியுறுத்துவது தொடர் பாக, பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறி ஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநில ஒருங்கிணைப் பாளர் (பொறுப்பு) எம்.ஆர்.ஆர்.சிவசுப்பிரமணியன் தெரிவித் தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதா வது: வழக்கறிஞர்களின் உரிமை களைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத் தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கறிஞர்களின் கோரிக்கை களை வலியுறுத்துவது தொடர் பாக, டெல்லி சென்று, பிரதமர் மோடி, சட்ட அமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர் களை சந்திக்கவுள்ளோம்.
அதேபோல, தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம்.
இதுபோன்ற சட்டத் திருத்தம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத் திலும் இல்லை. தமிழகத்தில் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று வதற்குப் பதிலாக, திசை திருப் பும் வகையில் கருத்துகள் வெளியிடப்படுகின்றன. எனவே, போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனியில் நாளை (ஜூன் 25) நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT