Published : 17 Jan 2019 08:36 AM
Last Updated : 17 Jan 2019 08:36 AM

முதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் தப்பிய காளை உரிமையாளர் களுக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. காளை உரிமை யாளர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சட்டை, துண்டு, போர்வை மற்றும் ஒரு பேக் வழங்கப்பட்டது.

இதுதவிர, வாடிவாசலில் நின்று விளையாடிய காளைகளுக்கும் அண்டா, பீரோ முதல் சைக்கிள், தங்கக் காசு, வெள்ளிக் காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அதனால், ஒரே காளையே 15-க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றதைக் காண முடிந்தது. அதுபோல, ஒரே ஒரு காளையை அடக்கிய வீரருக்கு 10-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அதனால், காளை உரிமையாளர்களும், வீரர்களும் உற்சாகமடைந்தனர்.

போட்டியின் நிறைவில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சிறந்த மாடுபிடி வீரராக அலங்கா நல்லூர் ஒத்தவீடு பகுதி எஸ்.பிரபாகரன் என்பவர் முதல் பரிசு பெற்றார். 10 காளைகளை அடக்கிய அவருக்கு கோப்பையும் பரிசாக மோட்டார் சைக்கிளும் வழங்கப்பட் டன. சிறந்த மாடுபிடி வீரருக்கான 2-வது பரிசை அலங்காநல்லூரைச் சேர்ந்த அஜய் என்பவர் பெற்றார். இவர் 9 காளைகளை அடக்கினார். 3-வதாக அலங்காநல்லூர் கார்த்திக் என்பவர் பரிசு பெற்றார். இவர் 8 காளைகளை அடக்கினார்.

களத்தில் நின்று விளையாடிய சிறந்த காளைக்கான முதல் பரிசாக மதுரை மலப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு கார் வழங்கப் பட்டது. 2-வது சிறந்த காளைக்கான பரிசை சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளை பெற்றது. மூன்றாவது சிறந்த காளைக்கான பரிசை மதுரை கேகே.நகரைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் என்பவ ரது காளை பெற்றது.

இந்த ஆண்டுதான், முதன்முத லாக பாலமேடு ஜல்லிக்கட்டில் கார் பரிசாக வழங்கப்பட்டது. அந்த பரி சும் சிறந்த காளைக்கு வழங்கப் பட்டதால், அதிகமான காளைகளை அடக்கிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து வீரர் பிரபாகரன் கூறும்போது, ‘‘3-வது சுற்றில்தான் களம் இறங்கினேன். முதலில் 3 காளைகளை பிடித்தேன். அடுத்த டுத்து காளைகளை அடக்கினேன். ஆனாலும் கார் பரிசாக பெறாதது ஏமாற்றம்தான்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x