Published : 17 Jan 2019 09:24 AM
Last Updated : 17 Jan 2019 09:24 AM
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானி லையே நிலவும். நீலகிரி மாவட்டத்தின் மலைத்தொடர் களில் அடுத்த இரண்டு இரவுகளில் உறைபனி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதிகாலை நேரத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானி லையே நிலவும். நீலகிரி மாவட்டத்தின் மலைத்தொடர் களில் அடுத்த இரண்டு நாள் இர வில் உறைபனி நிலவும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT