Published : 18 Jun 2018 09:01 AM
Last Updated : 18 Jun 2018 09:01 AM
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை தூண்டும் வித மாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சேலம் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ‘இந்த திட்டத்துக்காக நிலத்தை அளக்க வரும் அதிகாரிகளின் கையை வெட்டுவேன்’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்த மன்சூர்அலிகான், பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்ததுடன், மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதை அறிந்து, அதை பார்ப்பதற்காக வந்தேன். சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மத்திய, மாநில அரசு கள் இவற்றை செயல்படுத்தக் கூடாது. இந்த திட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தினால், அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்” என்றார்.
இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சேலம் தீவட்டிப்பட்டி போலீஸார் மன்சூர்அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை யில் சென்னை வந்த சேலம் போலீஸார், சென்னை சூளைமேட்டில் உள்ள மன்சூர் அலி கான் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்.
பின்னர், போலீஸ் வாகனத்திலேயே சேலம் அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT