Published : 20 May 2018 08:42 AM
Last Updated : 20 May 2018 08:42 AM
ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்றத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு அணி நிர்வாகிகளையும் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 10-ம் தேதி மாவட்டச் செயலாளர்களையும், 13-ம் தேதி இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களையும் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, கட்சியின் கிளை அமைப்புகளை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்களையும் ரஜினிகாந்த் இன்று காலை 10.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
இந்தச் சந்திப்பு சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT