Published : 24 Apr 2018 08:42 AM
Last Updated : 24 Apr 2018 08:42 AM
பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் எம்எல்ஏவும், பாஜக பிரமுகருமான நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில், பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் வழக்கறிஞர் ராஜேந்திரன் மூலம் எஸ்.வி.சேகர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு தொடர்ந்தார். அவருக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து, நாளை (ஏப். 25) இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT