Published : 25 Apr 2024 05:02 AM
Last Updated : 25 Apr 2024 05:02 AM

எழும்பூர் - விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயில்

கோப்புப்படம்

சென்னை: கோடைகால விடுமுறையை ஒட்டி, பயண நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் - ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து ஏப்.28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 10.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (08558) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சென்றடையும்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஏப்.27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) இரவு 7 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (08557) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இதுதவிர, விசாகப்பட்டினம் - எஸ்எம்விடி பெங்களூரு இடையே வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x