Published : 16 Apr 2024 05:20 AM
Last Updated : 16 Apr 2024 05:20 AM

தமிழக ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைவதால், கட்சித்தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். காலை 6.30 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்ற நிலையில், அவரது பயணம் சொந்த காரணங்களுக்கானது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அங்கு 3 நாட்கள் தங்கியிருக்கும் அவர், தேர்தல் பிரச்சாரம்நிறைவு நாளான 17-ம் தேதி புறப்பட்டு சென்னை வருவார் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x