Published : 06 Apr 2024 12:33 PM
Last Updated : 06 Apr 2024 12:33 PM

மதுரை | 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மலையேறி விழிப்புணர்வு

பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு

மதுரை: மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவிகள் இன்று (சனிக்கிழமை) மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில் ஏறி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நீண்ட வரிசையில் அணிவகுத்து கவனம் ஈர்த்தனர்.

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தி ஆங்காங்கே விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வரிசையில், மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில் கல்லூரி மாணவிகள் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , உதவி தேர்தல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை, காவல்துறை, செஞ்சிலுவை சங்கத்தினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x