Published : 25 Mar 2024 11:27 AM
Last Updated : 25 Mar 2024 11:27 AM

நெல்லை, மயிலாடுதுறை, விளவங்கோடு வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு: செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

சென்னை: "திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்." என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “பாஜக அரசால் எங்களின் நிதி ரூ.285 கோடி திருடப்பட்டிருக்கிறது. மோடி காங்கிரஸையும், ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளையும் ஒழிக்க முயற்சிக்கிறார். நிதி ஆதாரத்தை முடக்கினால், காங்கிரஸை முடக்கிவிடலாம் என மோடி பகல் கனவு காண்கிறார். மக்களுக்கான கட்சி காங்கிரஸ். அதை அவ்வளவு எளிதில் முடக்கிவிட முடியாது.

ஏற்கெனவே, விவிபாட் இயந்திரத்தில் எண்ணப்படும் பூத் சிலிப்புகளை கலந்து எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x