Published : 23 Mar 2024 06:08 AM
Last Updated : 23 Mar 2024 06:08 AM

தென் மாவட்டங்களில் பெய்த கோடை மழை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் கோடைமழை பெய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 4 செமீ, மதுரை மாவட்டம் புலிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், நாகுடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகியஇடங்களில் தலா 2 செமீ, தேனி மாவட்டம் போடி நாயக்கனூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, சேர்வலாறுஅணை, ராமநாதபுரம் மாவட்டம்மண்டபம், தொண்டி, சிவகங்கைமாவட்டம் காரைக்குடி, கோவைமாவட்டம் ஆனைமலை ஆகிய இடங்களில் தலா ஒரு செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 23) முதல் மார்ச் 28-ம் தேதிவரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் எனக் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x