Published : 08 Feb 2018 07:19 AM
Last Updated : 08 Feb 2018 07:19 AM
தேமுதிக விசாரணைக் குழு செயலாளராக முன்னாள் எம்எல்ஏவான எல்.வெங்கடேசன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தேமுதிக மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, வார்டு, கிளை கமிட்டி நிர்வாகி கள் மீதான புகார்களை விசாரித்து தீர்வு காணும் விசாரணைக் குழுவின் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் நியமிக்கப்படுகிறார்.
கட்சி நிர்வாகிகள் மீதான எதிர்மறையான கருத்துகளையும், குறைகளையும் விசாரணைக் குழுவில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
இவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.
கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் செயல்படுவார்கள். அவருக்கு மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT