Published : 20 Jan 2018 11:28 AM
Last Updated : 20 Jan 2018 11:28 AM

விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் சூட்டவேண்டும் என முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலை கட்சி வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முருகவேல்ராஜன் தலைமையில் அக்கட்சிப் பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பெருங்குடி ரவுண்டானா அருகே இருந்து விமான நிலையம் நோக்கி நேற்று காலை ஊர்வலமாக செல்லத் தயாராகினர்.

அப்போது முருகவேல்ராஜன் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் நல்லு கைது செய்தார். அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x