Published : 19 Dec 2023 04:10 AM
Last Updated : 19 Dec 2023 04:10 AM

கனமழை, வெள்ளம் - திருச்செந்தூரில் கடும் பாதிப்பு

தூத்துக்குடி: கனமழையால் திருச்செந்தூர் ஆவடையார்குளம் முழுமையாக நிரம்பியது. உபரி நீர் வெள்ளமாக ஓடியது.

இதனால் திருச்செந்தூர் நகரில் தெப்பக்குளம் சந்திப்பு, இரும்பு ஆர்ச் பகுதி, காமராஜர் சாலை, ஜீவா நகர் பேருந்து நிலையம், டி.பி. சாலை, ராஜ் கண்ணா நகர், குறிஞ்சி நகர், குமாரபுரம், ராமசாமிபுரம் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

திருச்செந்தூர் கோயில் கடலில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் வெளியூர் பக்தர்கள் மிகவும் சிரமமடைந்தனர். மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மின்தடை செய்யப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x