Published : 20 Jan 2018 11:45 AM
Last Updated : 20 Jan 2018 11:45 AM

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை தண்டனை

சேலத்தில் சிறுமிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதி மன்றத் தில் உத்தரவிடப்பட்டது.

சேலம் கன்னங்குறிச்சி புது ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (46). கூலி தொழிலாளி. கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஏழுமலை பாலியல் தொல் லை அளித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் காவல் நிலைய போலீஸார் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகிளா நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த பின், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏழுமலைக்கு 16 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x