Published : 20 Jan 2018 11:28 AM
Last Updated : 20 Jan 2018 11:28 AM

பெட்ரோல் பங்க் கழிப்பறைகள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே: உரிமையாளர்கள் அறிவிப்பு

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த உரிமை உள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் ஜெ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது குறித்து உரிய விளக்கத்தை மதுரை மாநகராட்சி தகவல் அலுவலரான நிர்வாக பொறியாளரிடம் பெறப்பட்டது.

இதன்படி, தனியார் நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. அவற்றை பொதுக்கழிப்பறையாக உபயோகிக்க மாநகராட்சி மூலம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது குறித்து அரசும் எந்த உத்தரவும் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் வாடிக்கையாளர்களுக்காகவே என்பது தெளிவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x