Published : 20 Jan 2018 11:44 AM
Last Updated : 20 Jan 2018 11:44 AM

சிதம்பரம் அருகே தந்தையை கொன்ற மகன், மருமகள் கைது

சிதம்பரம் அருகே புவனகிரி தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). இவர் புவனகிரி கடைவீதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவருடன் இவரது மகன் பாலமுருகன் (38) என்பவரும் தொழில் செய்து வந்தார். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டு.

இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பாலமுருகன் மனைவி தேன்மொழி தனது மாமனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் தாக்கிக் கொண்டனர். இதில் ஆவேசமடைந்த பாலமுருகன், தனது தந்தை பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்கினார். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன்,தேன்மொழியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x