Published : 18 Nov 2017 10:30 AM
Last Updated : 18 Nov 2017 10:30 AM
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 121 ரயில் நிலையங்களில் எல்இடி விளக்குகள் படிப் படியாக பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மின்சிக்கன திட்டங்களைச் செயல் படுத்தும் வகையில் எரிபொருள் சிக்கன சேவை நிறுவனத்துடன் சமீபத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டோம். அதன்படி, ரயில் நிலையங்களில் புதிய எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின்சிக்கன திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் 83.72 லட்சம் யூனிட் சேமிக்க முடியும். அதன்படி, அரக்கோணம், காட்பாடி, திருச்சி, மதுரை, கோவை, திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, திருவனந்த புரம், கொச்சி உட்பட 121 ரயில் நிலையங்களிலும் எல்இடி விளக்குகளைப் படிப்படியாக பொருத்தவுள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT