Last Updated : 08 Aug, 2023 08:59 PM

 

Published : 08 Aug 2023 08:59 PM
Last Updated : 08 Aug 2023 08:59 PM

ரயில்வே பாலம் பராமரிப்புப் பணி: நெல்லையில் ரயில் சேவைகளில் மாற்றம்

கோப்பு புகைப்படம்

திருநல்வேலி: நெல்லை ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே பாலம் பராமரிப்புப் பணி நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை - திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வ.எண்.06675) திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி செல்லக்கூடிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் (வ.எண்.06680) நாளை (ஆக.,9) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் - தாம்பரம் செல்லும் அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் (வஎண்.20692) நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.

பாலக்காடு சந்திப்பு - திருச்செந்தூர் செல்லக்கூடிய விரைவு ரயிலானது (வ.எண்.16731) பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே நாளை (ஆக.,9) இயக்கப்படும். திருச்செந்தூர் - பாலக்காடு சந்திப்பு செல்லும் விரைவு ரயிலானது (வ.எண்.16732) நாளை (ஆக்.,9) திருச்செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டும்.

ரயில் நேரம் மாற்றம்: நெல்லை- திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வஎண். 06409) நாளை (ஆக.,9) மாலை 4.15 மணிக்கு புறப்படுவதற்கு பதில் மாலை 6 மணிக்கு புறப்படும் என, மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x