Published : 24 Nov 2017 09:56 AM
Last Updated : 24 Nov 2017 09:56 AM

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கு சாந்தோ மில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் வயது, கல்வி சான்றிதழ்கள் நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் வரும் 29-ம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x